Tamil Mandram


நோக்கம்


  • நம் தாய் மொழியின் பெருமையை மாணாக்கர்களிடையே எடுத்துரைப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான், இந்த “தமிழ் மன்றம்”. தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன் தாய்மொழியின் வேரறிய, நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களைத் தேடிச் செல்லும் ஓர் அற்புதப் பயணம்தான் எங்கள் “தமிழ் மன்றம்”. தமிழின் பாரம்பரியம் மற்றும் தமிழரின் கலாச்சாரம் பற்றிய அறிவை மாணாக்கர்களிடையே வளர்க்கவும், தமிழில் தங்கு தடையின்றி பேசுவதை ஊக்குவிக்கவும் பல்வேறுவிதமான வாய்ப்புகளை மாணவ -மாணவியரிடையே ஏற்படுத்தித் தருவதே தமிழ் மன்றத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.